Saturday, June 11, 2011

உயிர்மையுவகை

நேர்வகிடு...

திருநீறு...

குங்குமத் திட்டு...

வட்டக் கரு மை ...

வளை புருவம்...

கூர்விழி...

செவ்விதழ்...

மணிக் கழுத்து...

மெல்லிடை..


உயிர் கிழிக்கும் போர்க்கருவி

இன்னும் மிச்சமிருப்பின் ...

தாளாது ஒழியட்டும்

இந்தப் பேருலகச் சாக்காடு ...!!

யார் இவர்கள் ??

மௌனத்தை கொலை செய்யும் வண்ணத்துப்பூச்சிகள்

இரைச்சல் யுத்தத்தில் யாசிக்கும் சின்னஞ்சிறுமிகள்

யோசிக்கும் முதுமையும் அதை வாசிக்கும் இளமையுமான ராஜாங்கங்கள்

எதோ ஒன்றை சொல்ல பிரிந்திருக்கும் பாலங்கள்

முகமுடி அணியாமல் அதை முடிசூடிக் கொள்ளும் சில அகோரங்கள்

தேடல் குறிக்கோள்களில் தன்னை தொலைத்துக் கொள்பவர்கள்

தனிமை இலக்கணம் மறுப்பவர்கள் அல்லது மறக்கப் படுபவர்கள்

நிஜங்கள் ஏதும் சொல்வதற்கில்லை

யார் இவர்கள் ? கேள்விகளாக முடியும் கானல்கள் ! ! !