Wednesday, August 22, 2012

குதிரைக்காரி


விஷம் அடர்ந்ததொரு வெட்டக் கானகத்தில் 
ஆண்மதிமிர் கொண்ட தறி கெட்ட குதிரையை 
பிடரிமயிர் பிடித்தடக்கக் கிளம்பினாள்
சாரதியொருத்தி ...!


அவள் வலக்கையில் க்யூபிட் அம்பும் 
அதன் அறுக்கப்பட்ட சிறகுகளுடன் ...
சில ரத்தத் துளிகளும் படிந்திருந்தன !!

அவள் வேகத்தின் ஈடு தாங்காமல் 
குளம்புகள் வீங்கித் தெரித்த அக்குதிரைக்குப் 
பின் தொடர்ந்த எறும்புகளும் வண்டுகளும் ..
அதன் தீ வடு குடைந்து தம் நாக்கினை குரூரச் சிவப்பாக்கின  !! 

காமம் தாளாத அப்பரியின் கண்களை 
வலக்கை அம்பினில் குத்திக் குதறி 
கணன்ற தன் மாரறுத்து கழுகுக்கும் , ராட்சதக் கெவுளிக்கும்
போதும் வரை இரையாக்கினாள்  அப்புனிதச் சாரதி ...!!

மீண்டெழுதல் மறக்கப்பட்டு  
புதைச்சகடுகளுடன் புணர்ந்து சாவதாக 
சபிக்கப் பட்டது அம்மனகுதிரை ..

அரவசீற்றலடங்களில் 
விஷமத்தின் சாம்பல் கழுவதொடங்கியதும் 
மதம் தெளிந்து... வெள்ளை நிறம் மாறி... 
அதே வண்ணத்தின் இரண்டு இறக்கைகளுடன் 
ஒரு பேரொளி வனத்தில் ...
தனது சாரதியை சுமந்து பறக்கிறது அந்த ஆண்மக்குதிரை ...!!!!

எது நடக்கிறதோ .!!!....அது நன்றாகவே நடக்கிறது ...