கவித்துவக்கம்
Monday, April 8, 2013
இன்னொன்று ..!!
ஒரு நெடுந்தூரச் சாலையின்
ஏதோ ஒரு குளக்கரையில் ...
ஏதோ ஒரு மரநிழலில் ...
ஏதோ ஒரு மணல்பரப்பில்...
சின்னதாய் ஒளித்து வைக்கப்படுகிறது ...
ஒரு சிட்டிகையில் ஏதோ ஒன்று...
மீண்டுமொரு நாளின்
தகையாறுதலு
க்காக
....!!!!!
Saturday, March 9, 2013
இரவு தீர்ந்தே விட்டது ....
இனி...
இரண்டு உயிர் ..
இரண்டு உடல் ....!!!!!!
...............
உயிர் அறுந்து கொண்டிருக்கிறது
பொழிதல்களி ன் ஒத்ததிர்வில்
கூடல் சகட்டின் முனகல் ஓலம் ...
இருவேறு மௌன இடைவெளியில்
சட்டெனத் துளிர்க்கிறது இன்னொரு இயல்பரியா மௌனம் ....!!??
போன்சாய் மரங்களும் ..
அதுசார்ந்த குட்டிக் குருவிகளும் ..
வாலறுந்த பூனையும் ..
சில காகிதப் பூக்களும்
மீதமிருத்தலை நிரப்பிக் கொண்டிருந்தன
மீண்டலில் சன்னல் விரிகிறது
அதே வெள்ளை வானம் ..
அதே குளிர்
மற்றும் கடைசி ஈரச் சொட்டு ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)