Friday, December 24, 2010

ஒருவரிக்கவிதைகள்

பொக்கிஷம்
கிறுக்கல் கவிதை... அப்பாவின் டைரிக் குறிப்புகள் ....!

இயற்கைப் பிழை
கருவறை கவனக் குறைவு.. .. திருநங்கை...!!!

வலி....
நிசப்தக் குமுறல் ....முதிர்கன்னி கனவு... !!!

வெட்கம் .
ஒருபொருட் பன்மொழி...என் வார்த்தைக்கான அவளின் இசைவுகள் .....!!!

சிரிப்பு

மழலையின் இன்ஸ்டன்ட் ஹைக்கூ ...

அப்பா

உழைப்பின் அடையாளமாய் இன்னுமொரு மௌனித்த சுமைதாங்கிக் கல் ....!

காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை 

எதார்த்தம் தாண்டிய வெளியின் முதல் கோடு....
முற்றுப் புள்ளி வைத்துத் தொடரப்படும் வரிகளின் ஜனனப் பிரதி...
துளிர்த்தலும் ...பிரிதலும் ...மிகுத்தலும்..
சிந்தனைச் சில்லுகளில் காப்பியபடும் இளவேனில் கீற்றுப் பின்னல்கள்..
அலைப்பேசிச் சிறைக்குள் தாழிட்டுக் கொள்ள
ஆயத்தப்படும் முன்னேற்பாடு..
கார் காலமொன்றின் நடுநிசியில் ...
தாய்ச் சிறகில் சேய் அடங்கும் வெப்பக் குளிரிலும்...
ஒரு குவளை தேநீர் உரையாடலின் கடைசித் துளியிலும்...
அடுத்த சந்திப்பிற்கான காத்திருப்பினை ...
அச்சாரப்படுதும் ஓரப் புன்னகையிலும் ...
பிரசுரிக்கப் படுகிறது ....
காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை ...!!!

சின்னதொரு பயணம் ...

முதல் வரியின் எழுத்து பிழை
உருவகம் தீட்டாத உயிரின் மௌனம்
என்னுள் அவளுமாய், அவளுடன் நானுமாய்
வாடகை காற்றினொரு அமைதி பயணத்தில்
சின்னதொரு பரிமாற்றங்கள்
இது உனதென்றும் அது எனதென்ருமாய்
அவன் சொன்ன அத்துணைக்கும் இவளின் அசட்டு சிரிப்பு மட்டும் .......

Tuesday, August 3, 2010

தூரிகை..

கண்ணாடிப் பலகையில்
மழைத் தூரிகை ஓவியம்...
அவள் பெயரும்
அதைத் தொடரும் சில புள்ளிகளும்.. !!!

Friday, July 16, 2010

கொஞ்சமும் சிந்தாமல்

நீர்மக்குடம் கிழித்து
கருவறை தாண்டிய பயணத்தில்
பிணி கொல்லும் வாழ்வின்
எதிர்மறை தளவாடம் ...

நிஜம் கொல்லும் சாவில்
நிழல் பூசும் அரிதாரம்
வரமும் சாபமுமென
தராசு முள்ளிடும் தனிமை...

புரிதல் மொழியில்
பாசத்தின் அடையாளம்
அறிவு கூர் தீட்டவொரு
ரௌத்திரக் கவிதை ...

அர்த்தமற்று எத்தனித்தும்
வாசிக்க தவறவில்லை
கொஞ்சமும் சிந்தாமல்
"அம்மா " என முதல் மொழியை !!!

Saturday, July 10, 2010

பசலை

வார்த்தைகள் தொலைகப்பட்டு ...

பிரபஞ்ச துகள் கூரிடும்மௌனப் பரிபாஷை ...

பகிர்தல் நினைவூட்டும்

இந்த பசலை போதுமடி

அந்த நினைவு துளி மீட்க .... !!

பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும்

உயிறீறாரும் , மெய் ஈரோன்பதும் ...
உயிருடன் மெய் புணரும்
இரு சதம் சொச்சமும் ...
வளை மணி குண்டலமொத்த
பிரிதிரண்டும் ...
உயர்திணை காதலும்...
பெருந்திணை காமமும் ..
எழு சீர் குறளும்
எழுத்தின் இடை குறையும் ..
எண்ணத் தோன்றலில்
மௌனக் குறுக்கமாய் ..
இல்பொருள் உவமைஎன
மாயை பழிக்குதடி
உறு பசலை பெருக்கலில்
ஒரு நொடி தீண்டலென
உனக்கும் எனக்குமாய்
இந்த பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும் !