Monday, September 17, 2012

.....


என்றுமே  இல்லாமல் 
ஏன் இப்படி அழகாய் தெரிகிறாய்  ..
தெப்பத்தில் விரிந்து படர்கிறது 
புரிதலுக்கான நீர்மை ஓவியங்கள் ..

பேடையின் குரலுடன் ஒன்றிக் கரைகிறது 
இருவருக்குமே  சொல்லப்படாமல் 
சிக்கிக் கொண்ட வார்த்தைகளில் ஒன்று ...

எதோ ஒன்றிற்காக நிர்வாணப்பட்டு 
பகிர்ந்து கொள்கிறோம் ..
யாவரும் அறிந்து கொள்வதற்கான சமிஞைகளில் ..
எதுவும் தெரியாமல் நீ மட்டும் ஒளிந்து கொள்கிறாய் 
தொலைதலுக்காக வளர்க்கப்பட்ட தேவதை  வனங்களில் ..

மீண்டும் ஒருமுறை கைகோர்த்துச் செல்லக் கடவது ..
நடுத்தரச் சாலை ..புளியம் பூ உதிர்வுகள் 
அனிச்சையாய் தலை வருடலும் ..
கொஞ்சம் இளஞ்சூடு தேனிரும் ...