சக்கர நாற்காலியில்
ஓடித்திரியும்
சிறுவன்
அலைபேசி சிறைக்குள்
அடங்கியிருக்கும்
நான் !
(விதிகள் மாற்றப்படட்டும் )
- நா.அருண்வாசகன்
சக்கர நாற்காலியில்
ஓடித்திரியும்
சிறுவன்
அலைபேசி சிறைக்குள்
அடங்கியிருக்கும்
நான் !
(விதிகள் மாற்றப்படட்டும் )
- நா.அருண்வாசகன்
அப்பாக்கள் அப்பாக்களாகவும்
பிள்ளைகள் பிள்ளைகளாகவும்
இருப்பதில்லை …
பிள்ளைகள் அப்பாக்களாகும்போது
அப்பாக்கள் பிள்ளைகளாகிறார்கள்
அல்லது ஆக்கப்படுகிறார்கள் .
- நா.அருண்வாசகன்
மனைவி சொல் மந்திரம்
என்பதில் எனக்கொன்றும்
வெட்கமில்லை ..
அம்மாவின் அன்பையும்
அப்பாவின் வார்த்தைகளையும்
அப்படியே அவளெனக்குத்
திருப்பித்தந்த போது
- நா.அருண்வாசகன்
பெரும் இரைச்சலுடன்
தரையிறங்கி
நிதானமாய் நிற்கச்செல்லுகையில்
விமானம் ஏனோ …
பால்யத்தில்
மூச்சிரைக்க சைக்கிள் மிதித்த
அப்பாவுடனான
பள்ளிப் பயணத்தை நினைவூட்டுகிறது …
- நா.அருண்வாசகன்
நூறு கோடி யுகங்கள்
தாண்டிய யாமத்து முடிவில் ,
இரவென்றோ பகலென்றோ பாரா
பெருவெளியில் பிறந்தது !
பிண்டமென்றும் ,பிள்ளையென்றும்
சொல்லவியலா உயிர்த்துகளொன்று .
மாறிச்சுழலும்
காலக் கடிகாரத்தின்
மேற்கில் உதித்தது ,
பெயரிடப்படாத கோளின் ஒளி நகல் .
இரை தேடிக்
கூடுதனை பிரிந்த பேடையின் கூவல்
உறைந்த பெருங்கடல்
வனமெங்கும் எதிரொலித்து ,
தொடுவானின் பாறையிடுக்கில்
பத்திரமாய் பதியப்பட்டது .
பிண்டத்தின் தொப்புள்கொடி
அரவத்தின் சாயலென்றும் ,
நுதலிடைத் தோன்றிய கண் …
முன்யுகத்து ஞானப்பெருக்கின்
எச்சமென்றும் சான்றுரைக்க ,
சுழியத்தில் தொடங்கி
உறைகடலில் சங்கமிக்கிறது
காலம் கடந்த நதியொன்று .
-நா.அருண்வாசகன்
குற்றங்களின் நிராகரிப்பைச்
சுவைக்கும் அருவச் சாத்தானின்
நீண்ட காத்திருப்பில் ..
முன்னிரவினை விழுங்கிய
அரவத்தின் சொற்படிமங்களில் ..
பதில்கள் மறுக்கப்பட்ட
கேள்விகள் மட்டும் ,
இருளில் ரீங்கரிக்கும் விட்டில்களுடன்
ஓயாமல் இரைந்து கொண்டிருந்தன !
பட்டாம்பூச்சியின் சிறகை விரித்து
அவள் ..
அன்றும் அப்படித்தான் ஆடையணிந்தாள் ;
கண்களற்ற ஓவியத்திற்க்கு
வண்ணம் தீட்டினாள் ;
பாசமுடன் அப்பாவுக்கு
தன் கடைசி முத்தமிட்டாள் !
பெருவனத்தில்
தனித்த நெடுமரத்தின் மௌனத்தை
கடக்கும் நொடிகளில் ,
தொடுவானில் கரைகிறது
அர்த்தநாரிப் பறவையொன்றின்
துயரப் பாடல் !
கொடுங்கனாவொன்று
களையும் வேளையில்
அந்தப் பட்டாம்பூச்சிகளின்
சிறகு முறியும்போது ..
உயிருள்ள பொம்மைகள்
எதுவுமே தலையாட்டுவதில்லை !
- நா. அருண் வாசகன்
வெண்கழுத்து
உலோகப் பறவையிலமர்ந்து
பெப்பெர்மெண்ட் நறுமணம்
நுகர்ந்து
எத்தியோப்பிய
காபியை பருகும்போது
உணரமுடிகிறது
அதிகார அடிமைத்தன நூலிழை !
அமெரிக்க விமானத்தில்
ஐரோப்பிய பயணங்களைப் படித்து
ஆப்பிரிக்க முதுமகளுடன்
பறக்கும் நான்
ஆசியாவின்
சமத்துவத் தூதுவன் தானே ? (ஸ்மைலியுடன்)