காரணி
கனவினை
வரைந்து கொண்டிருந்தேன் ..
ஒரு மரம் ,
மிக நெருங்கிய
புத்தகத்தோடு நான் ,
குவளைத்தேநீர் ,
தூரத்தில் ஓரருவி ,
மற்றெல்லாம் வெறும்
வெள்ளை நிற வெறுமை ..
மறந்து
கூடவே எடுத்துவந்துத்
தொலைத்திருக்கிறேன் ..
வாட்ஸ் ஆப் பீப் !
- நா. அருண்வாசகன்
சக்கர நாற்காலியில்
ஓடித்திரியும்
சிறுவன்
அலைபேசி சிறைக்குள்
அடங்கியிருக்கும்
நான் !
(விதிகள் மாற்றப்படட்டும் )
- நா.அருண்வாசகன்