Monday, July 30, 2012

ஆதலால் ....தம்பி உடையோன்...


உணர்வுகளை பகிர்ந்து கொள்ள 

நண்பனுக்கோ அல்லது காதலிக்கோ 

தேவை இருக்காது ...


நீங்கள் மறந்தாலும் 

வருடம் தவறாமல் 

பிறந்த நாள் புதுச் சட்டை வந்து சேரும் ..


சில வாரக் கடைசிகளின் பயணங்களில் 

பதிவுகளற்ற ரயில்பெட்டியிலும் 

உங்களுக்கான இருக்கை

சௌகரியமாய் வாய்த்திருக்கும்...


பழைய துணிகள் யாவும் 

மீண்டுமொருமுறை புதுப்பிக்கப்படும் ..


வீட்டுப் புதுவரவுகளில் 

நிச்சயம் இந்தக் கையொப்பம் இருக்கும் ..


அப்பா ...மிக நெருங்கிய நண்பன் கிடைத்தாய் 

 மனதுக்குள் குதூகலிப்பார் ...


அம்மாவுக்கு மீண்டுமொரு 

மாமியார் சண்டை காத்திருக்கும்..


குடும்பத்தலைவன் சாயலப்பிக்கொள்ளும் 

ஒத்திகை நிதம் அரங்கேறும் ...


ஒரு தேநீர் கடை 

கடற்கரை 

அல்லது சாலையோரச் சுவர் போதும் 

உலகத்தை ஏறக்குறைய அலசி விடலாம் ...


விரட்டிச் செல்லும் நிமிடங்களில் 

சிலவற்றை இவனுடன் ஒதுக்கிப் பாருங்கள் 

உங்களுக்கான ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றை நிழல் 

ஒரு நாய் குட்டி போல் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ...

................சிறகு


ஒரு புனிதத்தின் எதிர் இருக்கையில்

நெட்ட நெடுஞ்சாலையின் வெறித்த பார்வையில் 

வெம்மை துண்டங்களை ஒரு சேர கிரகித்து துப்பும் துளிகளில் 

ஓலமிட்டு ஓய்ந்து தள்ளும் நீலபெருங்கடலில் 

கர்வத்தில் ஓங்கி உயரும்  பெருமலையில் 

பகலின் முடிவில் சிதறித்தொங்கும் பிரபஞ்சத்துகளில் 

எங்கு சென்று தேட 

அர்த்தங்களற்ற பொழுதுகளில் தொலைத்த 

ஒற்றைச் சிறகினை ..