Monday, July 30, 2012

................சிறகு


ஒரு புனிதத்தின் எதிர் இருக்கையில்

நெட்ட நெடுஞ்சாலையின் வெறித்த பார்வையில் 

வெம்மை துண்டங்களை ஒரு சேர கிரகித்து துப்பும் துளிகளில் 

ஓலமிட்டு ஓய்ந்து தள்ளும் நீலபெருங்கடலில் 

கர்வத்தில் ஓங்கி உயரும்  பெருமலையில் 

பகலின் முடிவில் சிதறித்தொங்கும் பிரபஞ்சத்துகளில் 

எங்கு சென்று தேட 

அர்த்தங்களற்ற பொழுதுகளில் தொலைத்த 

ஒற்றைச் சிறகினை ..

No comments:

Post a Comment