
Wednesday, February 1, 2012
அர்த்தநாரிச் சிறகுகள்
காதல் பகிர்மானச் சின்னங்கள்
தொடர்வற்றதொரு பயணத்தில் தேடப்பட்டிருந்தன ...
இதயம் சிறகடித்துப் பறப்பது போலும்
கலவி நுகரும் புள்ளினங்கள் போலும்
கல்லறை ஓவியமொன்று காத்திருப்பது போலும்
இன்னும் சிலவகையில் பதிவிறக்கிய பொழுதுகளில்
இலக்கணப் பிழை என்றெண்ணி
சலனங்கள் ஏதுமில்லாமல்
தன் கடைசிச் சிறகையும் வேரறுத்துக் கொண்டிருந்தது
பாலிழந்ததாய் நிராகரிக்கப்பட்ட
அர்த்தநாரிப் பறவையொன்று...
பிறிதொரு கணத்தில் உயிர்க்கூறருப்பது போல்
யாசிப்பதாய் சமிக்ஞை செய்தது
மேற்குச் சிவத்தலில் இரையான தகவல்
யார்க்கும் தெரியாத விசித்திரம் !!
Subscribe to:
Posts (Atom)