Tuesday, May 28, 2019

இறுகச் சூழ்ந்திருக்கும்
இந்த இருள் நொடியின்
பிடியிலிருந்து விலக
பிரபஞ்சமெங்கும் சிதறிய வரிகளை
தேடிக்கொண்டிருக்கின்றேன்

அது ..
காய்ந்து சருகிய
பனையோலை இடுக்கில்
இரு வெளவால்களின்
மௌன மொழியிடையோ

இரவினை நிரப்பிக்கொண்டிருக்கும்
விட்டில் பூச்சியின் ரீங்காரத்திடமோ

மின் விசிறிக் காற்றில் சுழலும்
காகிதத்தின் சலசலப்பிலோ
ஒளிந்து கொள்கிறது

விரியும் வரிகளின் பேனா நுனியெங்கும்
மனதின் அழுகளின்
முடை நாற்றம் தாங்காமல்
விரல்களின் ஒவ்வொரு
ரேகையிலும் பதிகிறது
இந்நொடிகளின் அர்த்தம் தேடும்
வார்த்தைகளின் ஒளிநகல்


No comments:

Post a Comment