Monday, April 25, 2011

அந்தப் பொழுது

வானத்தின் அப்பால் முளைத்த மரமொன்றின்
வேர்க்கிளைகள் பூமி வரை ஊன்றி மறைவதும் ...

சிகப்புக் கோடிட்ட எல்லைக்குள்
புணர்வுகள் வகுக்கப் படுவதும் ...

அத்துமீறல்களின் சலசலப்புகள்
அந்த இளஞ்சூட்டுப் படிமத்தில் பொத்தல்களாக்கப்படுவதும்..

பதிவுகளற்ற தளமொன்றில்
பனிச் சில்லுகள் வேயப் படுவதுமான

அந்தப் பொழுது .....அந்திப் பொழுது ....

இன்னும் சில இணைதல்களில் பயணப்பட்டிருக்கலாம்
அல்லது ...
ஏதுமற்றதாய் தொங்கும் கிரகம் போல் நிர்வாணப்பட்டிருக்கலாம் ..!

No comments:

Post a Comment