Tuesday, March 1, 2011

காதல் சண்டாளன்

பரிமாணங்கள் வித்தியாசப்படுதலில்

முதலாவதாகத் தோன்றுவதெல்லாம்

கிறுக்கல்கள் தான் போலும் ....!!


அன்றும் அப்படிதான்

எனக்கும் பேனாவிற்கும்

மூன்றாம் உலகப்போர் ..!

என் சிந்தனைகள் எதுவுமே பிடிக்கவில்லையாம் !


வெற்றி தோல்விகள் நிர்ணயித்தலின்

உச்சஸ்தாணியில் வெற்றியெனக்கு...!

வேறென்ன ?!

கருவாக்கம் அவளைப்பற்றியது தான் !


வில்லொத்த புருவமென்றோ ...

நிலவொத்த பளிங்கு முகமென்றோ...

மைகவ்வும் கண்களென்றோ...

கால்தடப் பதிவுகள் கவிதையென்றோ...

வழக்கமாக வர்ணித்திருந்தால்

எக்காளமாய்ச் சிரித்திருக்கும் என் பேனா !


காதலும் காமமும் கலவி நுகர்ந்து ...

விடியலுக்கான வெட்கச் சிவத்தலில்...

நாணம் அதுவென்றும் நளினம் இதுவென்றும்

சில இரட்டிப்பு மொழிகளை

சிந்தையில் உறவாடி பிறகு சொன்னேன்

அவள் பெண்ணியம் அப்படியென்று !

சண்டாளன் !!!!

இப்போது என் பேனாவுக்கும் மோகத்தீ மூண்டு விட்டதாம் ?!!

1 comment: