Friday, March 11, 2011

இயல்பின் திரியாமை

பின்னிருக்கைக்கான

ஜன்னலோரப் பயணத்தில்

கவிதைகள் வரையப்பட்டிருந்தன

அவன் பெயர்...

அம்பு தைக்கப்பட்ட இதயம்...

மற்றுமதன் கீழாக அவள் பெயர் ....

அம்பின் கூர் நுனியில்

ரத்தம் அல்லது கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது ...

தியாகம் அல்லது தோல்வி ...

எதுவாகவும் இருக்கலாம் அந்த அடையாளம்.

பச்சை ,சிவப்பு ,அல்லது நீலம்

அது வரைந்தவனின் கையிருப்பைப் பொறுத்தது..

இன்னும் கண்கள் மேயப்படுதலில் சிக்கியது ...

அவர்களுக்கே உண்டான அந்த அதிசயப்பட்டங்கள் ..

குழுமங்கள் இன்ன பிற இத்தியாதிகள் ...

எது எப்படியோ ........!!!!

வெப்பத்தின் எச்சங்கள் சிதறிய அப்பொழுது

எவரது ரசித்தலுக்கும் பணயப்படவில்லை

பயணம் மட்டும் தொடர்ந்து கொண்டே ....

ஒரு வேளை அடுத்த சந்திப்பில் எனக்கானவள் காத்திருக்கலாம்

நானும் அவசரமாக வாங்கிக் கொண்டேன்

அந்த பச்சை ,சிவப்பு, அல்லது நீல நிற மை பேனா !!

No comments:

Post a Comment